சனி, 24 நவம்பர், 2012

சப்த கன்னியர்களுக்கு விரத வழிபாடு


நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோவில் கீழமுக்கூட்டில் அமைந்துள்ளது ஸ்ரீசுவர்ணபுரீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் தான் சப்த கன்னியர்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது.

தங்கம் தரும் அதிசய கோவில் என்று கூறுவது வழக்கம். அட்ஷய திதி அன்று தங்க நகை வாங்கி வந்து இங்கு அமைந்துள்ள ஸ்ரீசுவர்ணபுரீஸ்வரர், சுகந்தகுந் தளம் பிகையிடம் வைத்து பூஜை செய்து பின்னர் சப்த கன்னியர்களை  வணங்கி வந்தால் அடுத்தடுத்து தங்க நகைகள் வாங்கும் அளவிற்கு கையில் பணம் புரளும் என்பது நம்பிக்கை. 

கிழக்கு திசையை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் கொடிமரம் நம்மை வரவேற்கும். அங்கிருந்து இடது புறமாக திரும்பி நடந்து சென்றால் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது சப்த கன்னியர்கள் கோவில். இது நாளடவில் பெண்மையை போற்றும் அளவில் சப்த மாதர்கள் என்றாயிற்று. 

இதில் கன்னியர்கள் ஏழு வகை உள்ளது. அவை 1. பாரமி, 2. மகேஸ்வரி, 3. கவுமாரி, 4. வைஷ்ணவி, 5. வாராகி, 6. இந்திராணி, 7. சாமூண்டி. இவர்களுக்கு 21 நாட்கள் விரதம் இருக்கவேண்டும். அல்லது ஒன்பது மாதங்களில் வரும் திதிகளை கொண்டு விரதம் இருக்கலாம். விரதம் தொடங்கும்போது அமாவாசை கழித்து அஷ்டமியில் விரதத்தை தொடங்கி, பவுர்ணமி கழித்து விரதத்தை முடிக்கவேண்டும். 

அஷ்டஐஸ்வரியங்களாக கல்வியில் மேன்மை, திருமணம் கைகூடாமல் இருப்பது, குழந்தை பேறு இல்லாதவர்கள், வேலை செய்யும் இடத்தில் பணிசிறக்க, நற்காரியங்கள் மட்டும் நடைபெற, திருமணம் ஏற்பாடு நடக்கும்போது விவாதத்தால் தடை ஏற்படுவது, தம்பதியர்கள் ஒற்றுமையாக வாழமுடியாமல் இருப்பவர்கள் இந்த ஆலயத்திற்க்கு வந்து 8 வாரம் வழிபட்டால் இதுபோன்ற தடைகளிலிருந்தும், குறைகளிலிருந்தும் விடுதலை பெறலாம். 

நவகிரக தோஷங்கள் எதுவாயிருந்தாலும் சப்த கன்னியர்களை வழிபட்டால் அத்தனையும் நிவர்த்தியாகும் என்று  சப்த கன்னியர்களின் பலன்கள் கூறுகிறது. சிகப்பு வஸ்திரம், மாதுளம்பூ, மாதுளம் பழம், செவ்வாழை பழங்கள், அரளிப்பூ, நெய்தீபம், வளை யல், ரவிக்கை துணி, துண்டுகள், மற்றும் மங்கல  பொருள்கள் என ஏழு வாழை இலைகள் மற்றும் இரண்டு இலைகள் சேர்த்து ஒன்பது இலைகள் போட்டு  இந்த மங்கல  பொருள்களை வைத்து பூஜை செய்யவேண்டும். 

நமக்கு ஏற்பட்டுள்ள தடைகளை சப்த கன்னியர்களிடம் சொல்லி வணங்க வேண்டும். பின்னர் ஏழு இலை களில் உள்ள மங்கல பொருள்களுடன் ஏழை பெண்களுக்கு கொடுத்து வணங்க வேண்டும். ஒரு இலையை பூஜை செய்தவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். 

மற்றொரு இலையை அவர்களுடைய குடும்பத்தினர் ஒருவருக்கு கொடுத்து வழிபட்டால் நமக்கு ஏற்படும் தடைகளிலிருந்து விடுதலை பெற்று சந்தோஷசமான  குடும்பத்தை பெறலாம் என  பரிகாரங்கள் கூறுகிறது. 

செவ்வாய், பஞ்சமி, சப்தமி, பவுர்ணமி, இது போன்ற நாட்களில் பிரம்மாசரஸ்வதி ஹோமம், லெட்சுமி ஹோமம், சுதர்சனம் ஹோமம், சுயம்வரா பார்வதிதேவி ஹோமம், செய்வதன் மூலம் உடனே இதனுடைய அணுக்கிரக ங்களை பெற்று இதுநாள் வரை ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கி சுபகாரியங்களும், நற்செயல்களும் நடப்பதை நாம் கண்கூடாக காணமுடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக