திங்கள், 26 நவம்பர், 2012

வெங்காய மருத்துவம்



வெங்காய வைத்தியம்

* வெங்காயத்தை பச்சையாக மென்று உண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தடை நீங்கும். சிறுநீரை நன்கு வெளியாக்கும்.

* குளிர்சுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வெங்காயத்துடன் மூன்று மிளகு சேர்த்து உண்டு வர சுரம் தணியும்.

* உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வர உடல் உஷ்ணம் குறையும்.

* மயக்கமுற்றிருப்பவர்களின் மூக்கில் வெங்காயச் சாற்றை பிழிந்துவிட்டால் மயக்கம் தெளியும்.

* காதிரைச்சல், காதில் சீழ்வடிதல் முதலிய நோய்களுக்கு வெங்காயச்சாற்றை இரண்டு முதல் மூன்று துளி காதில் விட்டு வர அவை குணமாகும்.

* பசு நெய்யில் வெங்காயத்தை வதக்கி சீரகமும், கற்கண்டும் தேவையான அளவு சர்த்து உண்டு வர மூலச்சூடு தணியும்.

* வெங்காயத்தை உணவில் தினமும் சேர்த்து வந்தால் இதய நோய்களைத் தவிர்க்கலாம். பல வகையான தோல் நோய்களுக்கும் இது பயன்படுகிறது.

* இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் வெங்காயத்தைத் தினமும் உணவில் சேர்த்து வருவது நல்லது.

* முப்பது கிராம் வெங்காயத்துடன் ஏழு மிளகும் சேர்த்து நன்கு அரைத்து உண்டு வர வ�ந்திபேதி நிற்கும். சிறிது சர்க்கரையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இது வாந்திபேதியின்போது உண்டாகும் தாகம், அயர்ச்சி முதலியவைகளுக்கு நல்லது.

* பச்சை வெங்காயத்தை தினமும் நன்கு மென்று உண்டுவர பல் சம்பந்தமான நோய்கள் நம்மை அணுகாது.

* நூறு கிராம் வெங்காயத்தில் அடங்கி உள்ள சத்துக்கள்:-

ஈரப்பதம் - 86.6%
புரதம் - 1.2%
கொழுப்புச்சத்து - 0.1%
நார்ச்சத்து - 0.6%
தாதுச்சத்து - 0.4%
கார்போஹைட்ரேட்டுகள் - 11.7%

மாம்பழம் மருத்துவம்,



மாம்பழம் எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை. 100கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சியும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்து விடுவார்கள். மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில்தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது. வெண்ணெயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதை நாம் அறிவோம். இதே போன்றே மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான வைட்டமின ஏ இருப்பதால் விலை கூடுதலான வெண்ணெயை உண்பதைவிட விலை மலிவான மாம்பழத்தை உண்ணலாமே. நாம் சாப்பிடாமல் தூக்கி எறியும் மாங்கொட்டையிலும் கால்சிய சத்தும், கொழுப்பு சத்தும் இருக்கின்றது.

வாழைத் தண்டு மருத்துவம்,



வாழைத் தண்டு 
வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில்நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் & கற்களை விடுவிக்கும்.சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லதுமூன்று அவின்சு வீதம் தினம் உள்ளுக்கு சாப்பிட்டு வந்தால், வாய் ஓயாமல் இருமும் இருமல் நீங்கும். கோழைக் கட்டையும்இளகச் செய்யும். நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குக் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.

முல்லைப்பூ........மரு‌த்துவ குண‌ங்க‌ள்

முல்லைப்பூ........மரு‌த்துவ குண‌ங்க‌ள்மு‌ல்லை‌ப் பூவு‌ம் இத‌ன் இலையு‌ம் சே‌ர்‌த்து இடி‌த்து சாறு‌பி‌ழி‌ந்து, அதனுட‌ன் சம அளவு ந‌ல்லெ‌ண்ணை சே‌ர்‌த்து‌க் கா‌ய்‌ச்‌சி வடி‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.
இ‌தி‌ல் 4 து‌ளி ‌வீத‌ம் கா‌தி‌ல் ‌வி‌ட்டு வர கா‌தி‌ல் ‌சீ‌ழ் வடித‌ல் குணமாகு‌ம். இரவு நேர‌த்‌தி‌ல் இ‌ந்த மரு‌ந்தை கா‌தி‌ல் ‌விட வே‌ண்டு‌ம்.
மு‌ல்லை‌‌ப் பூ‌ச் செடி‌‌யி‌ன் வேரை தூ‌ள் செ‌ய்து, அதனுட‌ன் ‌சி‌றிது வச‌ம்பு தூளை சே‌ர்‌த்து எலு‌மி‌ச்சை பழ‌ச்சாறு ‌வி‌ட்டு அரை‌த்து பூ‌சி வர தோ‌ல் நோ‌ய்க‌ள் போகு‌ம்.
உடல‌் ‌வீ‌க்க‌ம் உ‌ள்ள இட‌த்‌தில‌் மு‌ல்ல‌ை‌ப் பூவை அரை‌த்து ப‌ற்று‌ப் போட அ‌ந்த ‌வீ‌க்க‌ம் கரையு‌ம்.
மு‌ல்லை‌ப் பூ இலையை நெ‌ய்‌யி‌ல் வத‌க்‌கி ஒ‌த்தட‌மிட தொ‌ண்டை வ‌லி குறையு‌ம்.
வா‌ய்‌ப்பு‌ண் உ‌ள்ளவ‌ர்க‌ள், ஒ‌ன்‌றிர‌ண்டு மு‌ல்லை‌ப் பூ இலையை ந‌‌ன்கு கழு‌வி வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று வர வா‌ய்‌ப்பு‌ண் குணமாகு‌ம்.
அ‌ம்‌பிகை ‌சிவனை பூ‌ஜி‌க்க பய‌ன்படு‌த்‌திய மல‌ர்க‌ளி‌ல் மு‌க்‌கிய இட‌த்தை‌ப் ‌பிடி‌ப்பது மு‌ல்லை‌ப் பூவாகு‌ம்.
ஒரு கை‌ப்‌பிடி அளவு மு‌ல்லை‌ப் பூவை ‌நீ‌ர் ‌வி‌ட்டு‌க் கா‌ய்‌ச்‌சி பா‌‌தியாக வ‌ற்‌றியது‌ம் அ‌தி‌ல் 15 ‌மி‌ல்‌லி அளவு குடி‌த்து வர மாத‌விடா‌ய் கோளாறுக‌ள் ‌நீ‌ங்கு‌ம்.
உட‌லி‌ல் சொ‌றி, ‌சிர‌ங்கு இரு‌ந்தா‌ல் வேறு வேலையே ஓடாது. எ‌ப்போது‌ம் கை சொ‌ரி‌ந்து கொ‌ண்டிரு‌ப்ப‌திலேயே மு‌ம்முரமாக இரு‌க்கு‌ம். எனவே, மு‌ல்லை‌ப் பூவை அரை‌த்து உட‌ல் முழுவது‌ம் தட‌வி அரை ம‌ணி நேர‌ம் க‌ழி‌த்து கு‌ளி‌க்கவு‌ம். ஒரு நா‌ள் ‌வி‌ட்டு ஒரு நாளாக 3 நா‌ட்க‌ள் செ‌ய்து வர ந‌ல்ல குண‌ம் ‌கிடை‌க்கு‌ம்.
மு‌ல்லை‌ப் பூ கொ‌ண்டு தயா‌ரி‌க்க‌ப்ப‌ட்ட கஷாய‌ம் கரு‌ப்பை நோ‌ய்களை போ‌க்கு‌ம் த‌ன்மை கொ‌ண்டது எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
மு‌ல்லை‌ப் பூ ம‌ட்டும‌ல்லாம‌ல், அத‌ன் இலை, வே‌ர்‌ப் பகு‌திகளு‌க்கு‌ம் அ‌திக ‌சிற‌ப்பு உ‌ள்ளது.

ஞாயிறு, 25 நவம்பர், 2012

உடலுக்கு வனப்பு தரும் வெந்தயத்தை




வயதுக்கு வந்த அதிக பெண்கள் மிகவும் அவதி படுவது அந்த 5 நாட்களில் 3 நாட்கள் அதிகமான வயிற்று வலி. இந்த வலி வருவது இயல்பு தான், இதுக்குனு நாம் மருத்துவரை அனுகி மாத்திரைகள் எடுத்தால் அதன் பின் விளைவுகள் அதிகமாக இருக்கும். ஆகையல் முடிந்த வரை வீட்டிலே இதுக்குனு கைமருந்து எடுத்துக்கொண்டால் பின்விளைவுகள் எதுவும் வராது
.
சிறிது வெந்தயம் அதில் 3 கப் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து மறுநாள் வெந்தய தண்ணீரை 3 வேளை தொடர்ந்து குடித்தால் "அந்த நாள் வயிற்று வலி" நன்றாக குறைந்து விடும். உடல் உஷ்ணம் உள்ளவற்களும் குடித்தால் உடல் உஷ்ணம் குறையும்.
அந்த 5 நாட்களில் காலை வெறும் வயிற்றில் கடுக்காய்த்தூள் 1 ஸ்பூன், மாந்துவர்ப் பொடி 1 ஸ்பூன், சீரகப் பொடி 1 ஸ்பூன் வெந்தயப் பொடி 1ஸ்பூன் அனைத்தையும் தேனில் கலந்து சாப்பிடவும். இரவும் சாப்பிடவும் இதனால் மாதவிடாய் கோளாறுகள், உடலின் சூடு, வயிற்றுபுண், கர்ப்பப்பை புண் போன்றவை நீங்கும். இன்னும் மாசம் தோறும் வயிறு வலியில் அவதிபடுபவர்கள் வயிற்றுவலி நீங்கும். உடல் அசதி நீங்கும், உடல் பலம் பெரும்,இடுப்பு வலி குறையும்

வெந்தயத்தை உணவாக, மருந்தாக, உடலுக்கு வனப்பு தரும் பொருளாக பயன் படுத்தலாம். ஒரு கரண்டி [100கிராம்] வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து [பொன் கலரில் பொரியும]. அதை ஆற வைத்து மிக்ஸியில் பொடி செய்து, பொடி ஆறிய பின் பாட்டிலில் போட்டு வைத்து பயன் படுத்தவும். இது நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

.கட்டி பெருங்காயத்தை சிறிய தட்டி கொண்டு,[50கிராம்] 100 கிராம் வெந்தயத்தையும் போட்டு வறுத்தால் இரண்டும் நன்கு பொரிந்துவிடும்.
அதை மிக்ஸியில் பொடி செய்து ஆற வைத்து வேறு பாட்டிலில் போட்டு
வைத்து கொண்டால் பலவிதங்களில் நமக்கு பயன்படும்.

 வயிறு உப்புசமாகவோ,பொருமலாகவோ இருந்தால் மோரில் இந்த [2வது] வகை பொடியை 1ஸ்பூன்+கொஞ்சம் உப்பு போட்டு கலந்து குடிக்க உடனே சரியாகும்.

 தினமும் காலையில் [1வது] வகை பொடியை மோரிலோ, தண்ணீரிலோ கலந்து குடிக்க ப்ளட் சுகர் கட்டுபாடாகும்.இதை வெறும் வயிற்றில்தான் குடிக்கனும்.. பேதி போகும்போது மோரில் [1வது] பொடியை 1 மணிக்கு ஒரு முறை 3 முறை குடித்தால் பேதி நின்றுவிடும்.
 முட்டு வலி இருப்பவர்கள் [சுகர் இல்லாதவர்கள்]1 ஸ்பூன் [1வது] வகை பொடி + சிறிய வெல்ல கட்டி கலந்து உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும். இது என் அனுபவம்.
 சிலருக்கு் வெளியூர் செல்லும் சமயம்தான் அடிக்கடி பாத்ரூம் போக தோன்றும். அந்த சமயம் [1 வது வகை] பொடியை 1/2 ஸ்பூன் 1/2 டம்ளர் நீரில் கலக்கி குடித்தால் வயிறு கலாட்டா செய்யாது. கிளம்பும் சமயம் சிறிய டப்பாவில் இந்த பொடியை எடுத்து செல்லவும்.
 ப்ளட்சுகர்+ ப்ளட் பிரஷர் குறைய, முழு வெந்தயம்- ஸ்பூன்,பாசிபயறு- 2 ஸ்பூன், கோதுமை-2 ஸ்பூன், இவற்றை முதல்நாள் இரவு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து அது ஊறும் அளவு நீர் ஊற்றி, மறுநாள் காலை மிளகு-2, சிறிது கல் உப்பு, கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் தோசை ஊற்றி [நல்லெண்ணெய்] காலை உணவாக சாப்பிட்டால் பி.பி, சுகர் நன்றாக குறையும்.

வெந்தயத்தை கறுப்பாக வறுத்து காப்பிபொடியில் கலந்து காபி போட்டு் கொடுக்கலாம். சுகர் உள்ளவர்களுக்கு நல்லது.

எமது உடலிற்கு கிருமி நாசினியாக தொழிற்படுகிறது மஞ்சள்


நாம் ஏன் உணவில் கொஞ்சமேனும் மஞ்சள் சேர்த்துக்கொள்ள வேண்டும். மஞ்சளின் மகத்துவ குணங்கள் எம்மில் எத்தனை பேர்

 தெரிந்துவைத்திருக்கிறோம். இதோ
 இன்றைய மூலிகை பகுதியில் மஞ்சளை பற்றி சிறிது அலசுவோம். மஞ்சளுக்கு பல மருத்துவ குணங்கள் உண்டு. அதில் மிக சிறப்பானது மஞ்சள் கிருமி நாசினியாக பயன்படுவது.

வயிற்றின் உள்ளே உள்ள கிருமிகளை விரட்டுவதில் மஞ்சளுக்கு நிகர் மஞ்சள்தான். சிறு குழந்தைகளுக்கு ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூளை,வேப்பங் கொழுந்துடன் வாரா வாரம் ஒரு முறை அரைத்துக் கொடுத்தால்வயிற்றில் பூச்சிகள் இருக்காது. 

மேலும் சிறு குழந்தைகளுக்கு வரும் சளி,இருமலுக்கு பாலைக் கொதிக்க வைத்து அதில் சிட்டிகை மஞ்சள் தூள் போட்டுசர்க்கரை சேர்த்து குடிக்கக் கொடுத்தால்சளிஇருமல் தொல்லை இருக்காது. வறட்டு இருமல்மற்றும் சளி இருமலால் இரவில் தூங்காமல் அவதிப் படுவோரும் பாலில் மஞ்சள் தூளைப் போட்டு கொதிக்க வைத்து பருகினால் இருமல் உடனே நின்றுவிடும். 

மஞ்சள் ஜீரணத்துக்கு உதவும் மருந்து கூட. நாம் அன்றாடம் செய்யும் சாம்பார்ரசம் இவைகளில் மஞ்சள் தூளை சேர்த்து விட்டுஅதனுடன் கூடவே பொரித்த சிப்ஸ்வடை,அப்பளம் என்றெல்லாம் காம்பினேசனில் சாப்பிட்டால் உணவு உடனே ஜீரணமாகிவிடும். 

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் மிளகாய் பொடி,அத்தனை நல்லதல்ல. ஆனால்,அதனுடன் கொஞ்சம் மஞ்சள் சேர்த்து சாம்பார் பொடி தயாரிக்கும் போதுமிளகின் கெட்டத் தன்மையை மஞ்சள் தூள் முறியடித்து விடும். மஞ்சள் தூள் அன்றாட உணவில் சேரும்போது புற்று நோய்கூட அண்டாது. 

இந்தியாவில் பல புற்றுநோய் வகைகள் இருந்தாலும் சருமம்,பெருங்குடல் புற்று நோய் கொஞ்சம் குறைவாக இருப்பது நாம் அன்றாடம் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வதால்தான். 

விரலி மஞ்சளில் இருக்கும் குர்குமின் சத்தில் உள்ள பாலிபீனால்கள் புற்று நோய் செல்களின் வளர்ச்சியைக் குறைப்பதிலும்நோய் வராமல் தடுப்பதிலும் பெரும் பங்கு அளிக்கின்றன என்று ஆய்வில் கண்டு பிடித்துள்ளார்கள். 

மஞ்சள் வயோதிகத்தில் வரும் நினைவுத் தடுமாற்ற நோய்கீமோதெரபி தரும்போது ஏற்படும் பக்க விளைவுகள் இவற்றை தடுக்கின்றது. சிறு வயது முதலே பெண் குழந்தைகள் முகத்தில் மஞ்சள் பூசிக் குளித்து வந்தால்,முகம் பொன்னென மின்னும். முகத்தில் தேவையற்ற முடிகள் வளராது. 

மஞ்சளில் உள்ள குர்குமின் சத்து புற்றுநோய் அண்டவிடாமல் தடுக்கும். ஏற்கனவே இருந்தாலும் அதன் வீரியத்தைக் குறைக்கும். உடலில் உள்ள உள் மற்றும் வெளிக் காயங்களை ஆற்றும்வீக்கத்தைக் குறைக்கும். 

அசைவ சாப்பாட்டில் மஞ்சள் சேர்த்து சமைத்தால் விரைவில் ஜீரணமாகும். தவிர மஞ்சள் கிருமி நாசினி என்பதால் இறைச்சியில் ஏதும் கிருமிகள் இருந்தாலும் அழித்து விடும். 

மஞ்சள் ஒரு தடுப்பு மருந்துவாசனையூட்டிஒரு வலி நிவாரணிஒரு இணை மருந்து என்று சொல்லிக் கொண்டே போகலாம். மஞ்சளை உணவில் பயன்படுத்துங்கள்பயன் பெறுங்கள்! 

கறிவேப்பிலை சாப்பிடுவதால்


நமது தமிழர்களின் வீட்டு சமையலில் கறிவேப்பிலை இல்லாமல் சமையலை பார்ப்பது மிகக்கடினம். நமது உணவுகள் அனைத்திலும் கறிவேப்பிலை இடம்பெற்றிருக்கும். கறிவேப்பிலை மணத்திற்காக பயன்படுத்துவது கிடையாது மணத்திற்காக தான் பயன் படுத்துகிறோம் என்றால் அது மிக தவறு. இயற்கை நமக்களித்த இயற்கை மருத்துவத்திற்கு கறிவேப்பிலை மிக சரியான உதாரணம். நமது முன்னோர்கள் தொட்டு இன்று வரை நாம் உண்ணும் உணவில் பயன்படுத்தி வருகிறோம்.
கறிவேப்பிலை இலையாக கையில் இருக்கும் போது அதிக மணம் இருக்காது. பச்சையாக சாப்பிட்டால் கசப்பது போல் இருக்கும் இளம் சூடான எண்ணெயில் போடும் போது தான் அதன் சுவையும், மனமும் அதிகரிக்கும். பல மருத்துவ குணங்களைக் கொண்டது தான் கறிவேப்பிலை.
நிறைய இடங்களில், நிறைய பேர் சாப்பிடும் போது பார்த்திருக்கிறேன் அவர்கள் கறிவேப்பிலையை சாப்பிடுவது கிடையாது எடுத்து இலையின் ஓரத்தில் வைத்து விடுவர் இது தான் இன்றளவும் அனைத்து இடங்களிலும் நடக்கும் உண்மை. இதன் நன்மைகள் முழுவதும் தெரியதாவர்கள் தான் இப்படி செய்கிறார்கள் நிச்சயம் இதன் நன்மை தெரிந்த எவரும் இனி சாப்பிடுவார்கள் என்பது தான் என் கருத்து.
கறிவேப்பிலையைப் பொடி செய்து சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். சட்னியாக செய்து தினப்படி சாப்பிட மிகவும் நல்லது.

கறிவேப்பிலைச் சட்னி:

கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து மற்றும் வெந்தயத்தை வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து, மிளகாய் மற்றும் தேவையான உப்பைச் சேர்த்து சட்னியாக செய்து இட்லி, தோசை போன்றவற்றுக்கு தொட்டு சாப்பிடலாம்.கறிவேப்பிலை சட்னி சுவையைத் தருவதுடன் உடல் எடையை சீராக வைப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.

கறிவேப்பிலையையும், பச்சைக் கொத்தமல்லியையும் சேர்த்தும் இதுபோன்று துவையல் அரைத்து சாப்பிடலாம். கறிவேப்பிலையைப் போலவே, மல்லி இலையும் ஜீரண சக்திக்கு முக்கியப் பங்காற்றக்கூடியது.
 
கறிவேப்பிலை பற்றிய ஆராய்ச்சி தகவல்கள்:

கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
 
நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் .

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்றும் கூறுகிறார்.

நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கறிவேப்பிலை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்:
  • இதில் நார்சத்து, வைட்டமின், மினரல் ஆகியவை அடங்கியுள்ளன.
  • கறிவேப்பிலை செரிமானத்திற்கு மிகவும் உதவும்.
  • இளநரையை தடுக்கும். சர்க்கரை வியாதியையும் கட்டு படுத்த வல்லது.
  • தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும்..
  • சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். 
  • கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
  • எந்த உணவானாலும், கடைசியாக அவற்றை தாளிக்கும் தருணத்தில், ஒன்றிரண்டு கறிவேப்பிலைகளை கிள்ளிப் போட்டு இறக்கி வைப்பார்கள். 
  • மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது.
  • கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும்.
  • பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். 
  • கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது.
  • குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.
  • வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமலிருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.
  • கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது.
  • கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது
  • கொழுப்புச் சத்து குறைய
    இன்று நாம் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளையே அதிகம் சாப்பிடுகிறோம். இதனால் இரத்த அழுத்தம், உடல் பருமன், உடல் சோர்வு போன்றவை உருவாகின்றது. இந்த கொழுப்புப் பொருள் பெரும்பாலும் எண்ணெயின் மூலம் அதிகம் உடலில் சேர்கின்றது. ஒரு லிட்டர் எண்ணெயில் 10 கறிவேப்பிலை போட்டு காய்ச்சி வடிகட்டினால் எண்ணெயில் உள்ள கொழுப்புச் சத்து நீங்கும்.
    சுவையின்மை நீங்க
    சிலருக்கு உணவு உண்ணும்போது அதில் அதீத சுவை இருந்தாலும் கூட அதை அவர் நாவினால் உணர முடியாது. இந்த சுவை அறியாதவர்களுக்கு எதைச் சாப்பிட்டாலும் மண்ணைத் தின்பது போலத்தான் இருக்கும். நிறைய குடும்பத்தில் கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்பட இதுவும் ஒரு காரணமாகின்றது.
    இவர்கள் கறிவேப்பிலை, சீரகம், இஞ்சி, சிறிதளவு பச்சை மிளகாய், புளி, உப்பு, பூண்டு இவைகளை நன்கு அரைத்து சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் சுவையை உணரும்
    தன்மை நாவிற்கு கிடைக்கும்.

    வயிற்றுப் போக்கு குணமாக
    கறிவேப்பிலை – 20 கிராம்
    சீரகம் – 5 கிராம்
    இரண்டையும் அரைத்து வாயில் போட்டு வெந்நீரை குடிக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து ஒரு டீஸ்பூன் சுத்தமான தேனையும் பருக வேண்டும். இவ்வாறு மூன்று வேளைகள் அருந்தி வந்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
    • குடலில் உள்ள கிருமிகளை அழிக்கும்.
    • கண் பார்வை தெளிவடையும்
    • இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
    • மது போதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலையின் சாறு கொடுத்தால் போதை உடனே குறையும்.
    • கை கால் நடுக்கத்தைப் போக்கும்.
    • வீக்கம், கட்டிகள் போன்றவற்றைக் குணப் படுத்தும்.
    • நகங்களில் ஏற்படும் நோய்களைக் குணப் படுத்தும்.
    இவ்வளவு மருத்துவப் பயன்களைக் கொண்ட கறிவேப்பிலையை தினமும் உணவில் சேர்த்து வந்தால் நோயினறி நூறாண்டுகள் வாழலாம்.